Saturday, September 19, 2009

செல்போன் - மின்சாரம் - விளைவிக்கும் பரிதாபம்!!




செய்யாதீங்க! செய்யாதீங்க! செய்யாதீங்க! தயவுசெய்து இது போல் எப்போதும் செய்யாதீங்க!!

சில தினங்களுக்கு முன் ஒரு இளைஞன் தன்னோட மொபைல் போனை தனது இல்லத்தில் சார்ஜ் செய்திருக்கின்றார். அதுசமயம் போனில் அழைப்பு வந்திருக்கிறது. சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
பேச ஆரம்பித்த சில வினாடிகளில் செல் போனில் செருகிவைத்திருக்கும் வொயர் வழியாக மின்சாரம் தாக்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் அதி வேகமாக தூக்கி எறியப்பட்டிருக்கிறான். சத்தம் கேட்டு இளைஞனின் பெற்றோர்கள் அறைக்கு ஓடி வந்திருக்கின்றார்கள். அப்போது கைகள் வெந்த நிலையில், ரொம்ப பலகீனமான இதயத்துடிப்புடன் அவர்களின் செல்ல மகன் மயக்க நிலையில் விழுந்து கிடப்பதை பார்த்தனர்.
மயக்க நிலையில் இருந்த இளைஞனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். நிலை குலைந்துபோன பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற யாரால் இயலும்?
எது எப்படியோ இப்போது நம்மால் கண்டிப்பாக உணரமுடிகிறது. மொபைல் போனால் உயிரே பறிக்கப் படுகின்றது என்றால், நாமும் கொஞ்சம் உஷாரா இருப்பதில் தவறு இல்லையே?
இந்த நவ நாகரிக உலகத்தில் செல் போன் இல்லாதவர்கள் என்று கணக்கெடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம் அவர்களின் எண்ணிக்கையை.
அதன் அவசியமும் அத்தியாவசியாமான ஒன்றாகிவிட்டது. கையில் கடிகாரம் கட்டுவது எவ்வளவு அவசியம்? காலில் செருப்பு அணிவது எவ்வளவு அவசியம்? அது போல்தான் கைபேசி வைத்துக் கொள்வதும் அவ்வளவு அவசியம் என்று. அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக மொபைல் போனை அங்கீகாரம் அளித்து நாம் அதை கையிலே எடுத்துச் செல்கின்றோம்.
அதே சமயம் அதை எப்படி உபயோகப் படுத்துவது என்பதிலும் வகை தொகை உள்ளது. அதை நாம் கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதற்கு மேலே கூறிய சம்பவம் ஒரு நல்ல உதாரணம். எனது நண்பர்கள் பலர் இது போல் செய்வார்கள். பார்க்கும்போதே எனக்கு கோவம் வரும். சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
நான் பெற்ற செய்தி, இதை படித்தவுடன் துடித்துவிட்டேன். ஏனெனில் எனது நண்பர்கள் பலர் இதுபோல் ப்ளக்கை சொருகி விட்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.
எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்ஐயமில்லை.
இந்த விவரம் தெரியாதவர்கள், மேலே உள்ள படத்தினை பார்த்துவிட்டு மிகவும் உஷாராக இருக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இது போல் செய்யாதவர்கள் தப்பித்தவர்கள் கணக்கில்.
இது போல் செய்பவர்ககள்............ தவிர்ப்பது நல்லது.
டிஸ்கி: அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது எண்ணங்களின் பரிமாற்றங்கள் அவ்வளவுதான்....
button="hori";
submit_url ="http://ramya-willtolive.blogspot.com/2009/09/blog-post_16.html"
Posted by: RAMYA at 6:10 PM 38 பேர் என்ன சொல்லிருக்காங்கன்னா.....
Lable: ,
Older Posts

0 comments: